பாலியல் வன்கொடுமையால் சிறுமி மரணம்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மரணத்திற்கு காரணமான கயவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மரணத்திற்கு காரணமான கயவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் கொட்டாபட்டி அருகே உள்ள ஒரு மலை கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு கயவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், “தர்மபுரியில் 17வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து தான் துயருற்றதாகவும், இதற்குக் காரணமான கயவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தர்மபுரியில் 17வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றேன். மனிதம் இப்படியெல்லாம் வக்ரம் அடைந்து வருவது பெரும்வேதனை!
இதற்குக் காரணமான கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும்!
பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? pic.twitter.com/WrUDHXI9Ib
— M.K.Stalin (@mkstalin) November 11, 2018
அதுமட்டுமின்றி, “பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ?” என்றும் தன் ட்வீட்டில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.