பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான சிறுமி… உத்திரப்பிரதேசத்தை உலுக்கிய சம்பவம்

 

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான சிறுமி… உத்திரப்பிரதேசத்தை உலுக்கிய சம்பவம்

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் ஒரு ஒன்பது வயது சிறுமி மார்ச் 10ம் தேதி இரவு அவரின் கிராமத்தில் மயக்கமான நிலையில் கிடந்தார். அப்போது அந்த வழியாக வந்த சிலர் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டுபோய் சேர்த்தனர். இருப்பினும் வியாழக்கிழமை சிகிச்சை பலனளிக்காமல்  அவர் இறந்தார் .

மார்ச் 10 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் தனது கிராமத்தின் புறநகரில் ஒன்பது வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார் ..

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் ஒரு ஒன்பது வயது சிறுமி மார்ச் 10ம் தேதி இரவு அவரின் கிராமத்தில் மயக்கமான நிலையில் கிடந்தார். அப்போது அந்த வழியாக வந்த சிலர் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டுபோய் சேர்த்தனர். இருப்பினும் வியாழக்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார். அவரை சோதனை செய்த மறுத்தவர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், பிறகு மர்மநபர் அவரின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளதாகவும் கூறினார்கள் .இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

gang-rape-97

இதற்கிடையில், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீஸ் படையை அதிக அளவில் நிறுத்தி  இப்பகுதியில் பாதுகாப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தடயவியல் குழு ஒரு மோப்ப நாய் படையுடன், மைனர் சிறுமி மயக்க நிலையில் காணப்பட்ட இடத்தை பார்வையிட்டதாகவும், அந்த இடத்தை உன்னிப்பாக ஆய்வு செய்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

priyanka-gandhi

இந்த சம்பவம் பற்றி காங்கிரஸ் தலைவரும் கிழக்கு உத்தரபிரதேசத்தின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி ட்விட்டரில் . “உ.பி.யின் பாஜக அரசில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளன. இந்த சம்பவங்கள் அரசாங்கத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா? ஒன்பது வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சையின் போது இறந்தார். இது எவ்வளவு காலம் நீடிக்கும்?” என்று பிரியங்கா காந்தி இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.