பாலியல் இச்சைக்கு ஒத்துக்கொள்ளாத தாய், மகளுக்கு மொட்டை!

 

பாலியல் இச்சைக்கு ஒத்துக்கொள்ளாத தாய், மகளுக்கு மொட்டை!

பீகார் மாநிலத்தில் தாய் மற்றும் மகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியது மட்டுமில்லாமல் அவர்களை ஊர் நடுவில் வைத்து மொட்டை அடித்து இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலத்தில் தாய் மற்றும்  மகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியது மட்டுமில்லாமல் அவர்களை ஊர் நடுவில் வைத்து மொட்டை அடித்து இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பகவான் பூர் எனும் கிராமத்தில் வசித்து வரும் தாய் மற்றும் மகளிடம் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டுக்குள் நுழைந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு இருவரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  பெண்களை துன்புறுத்திய ஆடவர்களில் ஒருவர் அரசாங்க அதிகாரி என கூறப்படுகிறது. புதிதாக மணமுடித்த அந்த 19 வயது இளம்பெண்ணை, 5 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்திருக்கிறார்கள். அதிகாரியைத் தடுத்த நிறுத்திய பெண்ணின் கணவரும், தாயாரும் மற்ற ஆண்களால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள் .

பிறகு தாய்க்கும், மகளுக்கும் மொட்டையடித்து வலுக்கட்டாயமாக தெருவில் இழுந்து சென்றுள்ளனர். இதைப் பார்த்த ஊரில் உள்ள ஒருவரும் அவர்களுக்கு உதவி செய்ய வரவில்லை. இதையடுத்து அந்த தாயும் மகளும் அளித்த புகாரின் பேரில் சம்மந்தப்பட்டவர்களில் 6 பேரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்..