பான் – ஆதாரை இணைக்க மார்ச் 31 ஆம் தேதி வரை கால அவகாசம்- மத்திய அரசு

 

பான் – ஆதாரை இணைக்க மார்ச் 31 ஆம் தேதி வரை கால அவகாசம்- மத்திய அரசு

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நாளையே கடைசி நாள் என வருமான வரித்துறை அறிவித்திருந்த நிலையில் இந்த அவகாசம் 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பான் கார்டு- ஆதார்

பான் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டும் என்று சில வருடங்களாகவே வருமான வரித்துறை கூறிவருகிறது. பெரும்பாலானவர்கள் பான்-உடன் ஆதாரை இணைத்துவிட்ட பிறகும் ஒரு சிலர் இன்னும் இணைக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அனைவரும் பானுடன் ஆதார் இணைப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு நாளையுடன்  முடிவடைவதாக வருமானவரித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது மார்ச் 31 ஆம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.