பானுப்பிரியா அண்ணன் மீது பாலியல் புகார்

 

பானுப்பிரியா அண்ணன் மீது பாலியல் புகார்

நடிகை பானுப்பிரியா அண்ணன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை: நடிகை பானுப்பிரியா அண்ணன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் பானுப்பிரியா. தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்திருக்கிறார். அவர் மீதும், அவர் அண்ணன் மீதும் பிரபாவதி என்ற பெண்மணி புகார் அளித்துள்ளார். வறுமை நிலை காரணமாக சந்தியா எனும் தன் 14 வயது மகளை பானுப்பிரியாவுக்கு பணிவிடை செய்ய அனுப்பியுள்ளார் பிரபாவதி. ஆனால் கடந்த பத்து மாதமாக சந்தியாவுக்கு சம்பளம் தரவில்லை என கூறப்படுகிறது. 

அதுமட்டுமல்லாது பானுப்பிரியாவின் அண்ணன் கோபால கிருஷ்ணன் என்பவர் சந்தியாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சந்தியாவின் தாயார் பிரபாவதி விசாரிக்க சென்றபோது சந்தியா மீது பொய்யான திருட்டு வழக்கு போட்டு அவரை சிறையில் தள்ளியுள்ளனர். எனவே பானுப்பிரியா மீதும் அவர் அண்ணன் மீதும் ஆந்திராவில் உள்ள சமல்ரக்கோட்டை காவல்நிலையத்தில் பிரபாவதி புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பானுப்பிரியாவையும் அவர் அண்ணனையும் விசாரிக்க சென்னை விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.