பாடல் வரிகளை கொண்டே விவேக்கின் புகைப்படத்தை வரைந்த வெறித்தனமான ரசிகர்!

 

பாடல் வரிகளை கொண்டே விவேக்கின் புகைப்படத்தை வரைந்த வெறித்தனமான ரசிகர்!

பாடலாசிரியர் விவேக்கின் ரசிகர் ஒருவர், விவேக் எழுத்திய பாடல் வரிகளை கொண்டு அவரின் படத்தை வரையும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. 

பாடலாசிரியர் விவேக்கின் ரசிகர் ஒருவர், விவேக் எழுத்திய பாடல் வரிகளை கொண்டு அவரின் படத்தை வரையும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. 

 

 

விஜய் – மெர்சல் கூட்டணியில் உருவான மெர்சல் படத்தில் வரும் ஒரு விரல் புரட்சி பாடலை தொடர்ந்து, பிகில் படத்தில் வரும் சிங்கப்பெண்ணே பாடலையும் விவேக் எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தை அதிரவைத்த இந்த பாடல் விவேக்கிற்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்நிலையில் விவேக் எழுத்திய பாடல் வரிகளை கொண்டு விவேக் படத்தை ரசிகர் ஒருவர் வரைந்துள்ளார். இந்த வீடியோவை பாடலாசிரியர் விவேக் ரீட்வீட் செய்துள்ளார். மேலும் நீங்கள் என்னுடைய இந்த நாளை சிறப்பித்து உள்ளீர்கள் என்றும் கமெண்ட் செய்துள்ளார்.