பாஜக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது- எல்.முருகன்!

 

பாஜக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது- எல்.முருகன்!

கட்சியை வளர்க்க தொய்வின்றி சிறப்பாக பணி செய்கிறோம். பாஜக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், “கோவையில் இந்து இயக்கங்களை சேர்ந்த ஆனந்த், சூரிய பிரகாஷ் ஆகியோர் தீவிரவாதிகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களில் ஒரு சிலரை மட்டுமே காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவில்லை. கோவையில் அமைதி நிலவ வேண்டும். தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டும். இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கிறது. இதனை தடுக்க காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Murugan L

கட்சியை வளர்க்க தொய்வின்றி சிறப்பாக பணி செய்கிறோம். பாஜக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்” என தெரிவித்தார்.