பாஜக அழிவு பாதைக்கு செல்கிறது என கூற முடியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
5 மாநில சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்திருப்பதால் பாஜக அழிவு பாதைக்கு செல்கிறது என கூற முடியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்திருப்பதால் பாஜக அழிவு பாதைக்கு செல்கிறது என கூற முடியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக, அந்த கட்சி ஆட்சி செய்து வந்த சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அக்கட்சி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது, மோடியின் வீழ்ச்சி என்பதைவிட, ராகுலின் எழுச்சியாக பார்க்க வேண்டும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “பாஜக தோல்விக்கு, அந்த மாநில முதல்வர்கள் மீது இருந்த அதிருப்தி கூட காரணமாக இருக்கலாம். இதைவைத்து, பாஜக அழிவு பாதைக்கு செல்கிறது என கூற முடியாது” என தெரிவித்துள்ளார்.
மேலும், செந்தில் பாலாஜி திமுகவில் இணைவது அவரது சொந்த விருப்பம் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.