பாஜக – அதிமுக கூட்டணி அமையாது; அமைந்தாலும் தாமரை எழும்பாது: கே.எஸ்.அழகிரி

 

பாஜக – அதிமுக கூட்டணி அமையாது; அமைந்தாலும் தாமரை எழும்பாது: கே.எஸ்.அழகிரி

பாஜக – அதிமுக கூட்டணி அமையாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்

சென்னை: பாஜக – அதிமுக கூட்டணி அமையாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் நீக்கப்பட்டு, புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர்  சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை இன்று சந்தித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார். யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என திமுக-வுக்கு தெரியும் என குறிப்பிட்ட அழகிரி, மத்திய அரசை அகற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்றார்.

மேலும், பாஜக – அதிமுக கூட்டணி அமையாது. அப்படி அமைந்தாலும் தாமரை மேலே எழும்பாது என சாடினார். திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வேறு சில கட்சிகளும் வர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.