பாஜகவை விமர்சித்து பேசிய  சுற்றுச்சூழல் ஆர்வலர் கைது

 

பாஜகவை விமர்சித்து பேசிய  சுற்றுச்சூழல் ஆர்வலர் கைது

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், சுற்றுச் சூழல் ஆர்வலர், சமூக செயற்பாட்டாளருமான தூத்துக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற கிட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், சுற்றுச் சூழல் ஆர்வலர், சமூக செயற்பாட்டாளருமான தூத்துக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற கிட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 

2020 ஜனவரி 4 சனிக்கிழமை மாலை தூத்துக்குடியில் நடைபெற்ற குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய கிருஷ்ணமூர்த்தி RSS, BJP, VHP உள்ளிட்ட அமைப்புகளை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சாதி, மத, இனப் பிரிவினைகளைத் தூண்டி விடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிருஷ்ணமூர்த்தி கிட்டு மீது தென்பாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்த அவரை கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

arrested

விரைவில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் அல்லது நீதிபதியின் இல்லத்தில் கிருஷ்ணமூர்த்தி ஆஜர் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தென்பாகம் காவல்துறை தெரிவித்துள்ளது.