பாஜகவில் இணைந்தார் சிந்தியா! பரிசாக வழங்கப்பட்டது எம்.பி.சீட்!!
Mar 11, 2020, 20:35 IST1583939126000
18 ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா நேற்றுடன் அந்த கட்சிக்கு குட்பை சொல்லி விட்டார். சிந்தியா மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 21 பேரும் காங்கிரசிலிருந்து விலகியதால், மத்திய பிரதேச காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளது. அதேசமயம் பா.ஜ.க.வுக்கு மீண்டும் ஆட்சியை அமைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி உள்ளது.
காங்கிரஸிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா இன்று ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவுடன் இணைந்துள்ளர். கட்சியில் இணைந்ததற்காக வருக்குமாநிலங்களவை உறுப்பினர் பதவியும், மத்திய அமைச்சரவையில் இடமும் வழங்க பா.ஜ.க. தயாராக உள்ளது.