பாஜகவின் கூட்டணி கனவிற்கு வேட்டு வைத்த தம்பிதுரை: சீறும் பொன்னார்!

 

பாஜகவின் கூட்டணி கனவிற்கு வேட்டு வைத்த தம்பிதுரை: சீறும் பொன்னார்!

பாஜகவுடன் கூட்டணி இல்லை என தம்பிதுரை கூறிய நிலையில், அதிமுகவின் கூட்டணி குறித்து பேச தம்பித்துரைக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? என பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கன்னியாகுமரி: பாஜகவுடன் கூட்டணி இல்லை என தம்பிதுரை கூறிய நிலையில், அதிமுகவின் கூட்டணி குறித்து பேச தம்பித்துரைக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? என பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவுடன் அதிமுக தேர்தல் கூட்டணி அமைக்காது என மக்களவை துணை சபாநாயகரும், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தம்பிதுரை சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுகவின் கூட்டணி குறித்து பேசுவதற்கு தம்பித்துரைக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? என கேள்வி எழுப்பினார்.

அதேசமயம், கூட்டணி குறித்து அதிமுகவில் முடிவெடுக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக கூறிய பொன்னார், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை பாஜக எந்த முடிவையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.