பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாய் பதிவிட்டவர் அண்ணனின் பேக்கரியை சூறையாடிய மர்ம கும்பல்

 

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாய் பதிவிட்டவர் அண்ணனின் பேக்கரியை சூறையாடிய மர்ம கும்பல்

மடிவாலா: பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாய் பேஸ்புக் ப்ரபைல் பிக்ச்சர் வைத்தவரின் அண்ணனுடைய பேக்கரியை சூறையாடியிருக்கிறது ஓர் மர்ம கும்பல்.

கர்நாடக மாநிலம் மடிவாலாவில் பேக்கரி நடத்தி வருபவர் முனீர். இவருடைய தம்பி அப்துல் சலீம், நான் பாகிஸ்தான் ராணுவத்தின் பக்கம் என்று பேஸ்புக் டிபி வைத்துள்ளார். இந்த டிபி வைரலான பின்னர், அவரது அண்ணனின் பேக்கரி ஒரு மர்ம கும்பலால் சூறையாடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது முனீரும் சலீமும் அங்கு இல்லை. பேக்கரி அமைந்திருக்கும் கடை வாடகைக்கு எடுக்கப்பட்டது, கடையின் உரிமையாளர் எவ்வளவோ சொல்லியும் அந்த கும்பல் கடையை அடித்து நொறுக்கியின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருக்கும் வேளையில், சலீம் இப்படி டிபி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. சலீம் தலைமறவாகிவிட்டார், அவர் கேரளாவை சேர்ந்தார். கேரளாவில் உள்ள அவர் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வன்முறையை தூண்டும் விதமாக பதிவு செய்ததால், சலீம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பேக்கரியை நொறுக்கிய கும்பல் மீது எந்த நடவடிக்கையும் இல்லை, அவர்கள் யார் என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை.