பழனி பஞ்சாமிர்த கடையிலிருந்து 56கிலோ தங்கம் பறிமுதல்?!
Sep 3, 2019, 06:58 IST1567474089000
இவ்விரு நிறுவனங்களுக்கும் சொந்தமான வீடுகள், குடோன்கள், அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.
பழனி: பழனி பஞ்சாமிர்தம் கடை உரிமையாளர்களிடமிருந்து 56 கிலோ தங்கம், 2 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பழனி மலை அடிவாரத்தில் சித்தனாதன், கந்தவிலாஸ் விபூதி போன்ற புகழ்பெற்ற பஞ்சாமிர்த கடைகள் அமைந்துள்ளது. இதில் நிறுவனங்களில் வரிஏய்ப்பு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 29ஆம் தேதி முதல் இவ்விரு நிறுவனங்களுக்கும் சொந்தமான வீடுகள், குடோன்கள், அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.
5 நாட்கள் நடந்த இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத 56 கிலோ தங்கம், 2 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.