பழந்தமிழர் கட்டிடக்கலை ரகசியங்கள்! வீடு கட்டும் போது இதையெல்லாம் செய்யக்கூடாது!

 

பழந்தமிழர் கட்டிடக்கலை ரகசியங்கள்! வீடு கட்டும் போது இதையெல்லாம் செய்யக்கூடாது!

இத்தொழில் செய்யும் கலைஞர்களை ‘கண்ணுள் வினைஞர் கண்ணாளர்’ என்று குறிப்பிட்டார்கள். வடமொழியில் இக்கலை வாஸ்து வித்ய எனப்பட்டது. கட்டிடக்கலையின் உறுப்பு என கல்,செங்கல்,மண்,சுதை, உலோகம், மரம், தந்தம், வண்ணம்,கண்டசர்கரை,மெழுகு ஆகியவை சொல்லப்படுகின்றன.

உலகம் முழுவதுமுள்ள 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடங்களை கணக்கெடுத்தால் அதில் சரிபாதி இந்தியாவில் இருக்கும்.அதில் பாதிக்கு மேற்பட்டவை தமிழகத்தில் இருக்கின்றன!இது எப்படி?

இதுக்கு காரணம்,பண்டைத்தமிழர் கட்டுமானக் கலையில் கொண்டிருந்த அறிவு.ஆயக்கலைகள் 64-ல் கட்டிடக்கலையும் ஒன்று.அதை ‘இல்லமெடுத்தல், கோயில் முதலானவை கட்டும் சாத்திரம் ‘ என விளக்குகிறது மதுரை தமிழ் பேரகராதி. 

கட்டிடம்

இத்தொழில் செய்யும் கலைஞர்களை ‘கண்ணுள் வினைஞர் கண்ணாளர்’ என்று குறிப்பிட்டார்கள். வடமொழியில் இக்கலை வாஸ்து வித்ய எனப்பட்டது. கட்டிடக்கலையின் உறுப்பு என கல்,செங்கல்,மண்,சுதை, உலோகம், மரம், தந்தம், வண்ணம்,கண்டசர்கரை,மெழுகு ஆகியவை சொல்லப்படுகின்றன.

jj

அதாவது நூறு வருடம் முன்புவரை தமிழகத்தில் கட்டப்பட்ட எல்லாக் கட்டிடங்களும் இவற்றைக் கொண்டுதான் கட்டப்பட்டன.அது இரண்டாயிரமாண்டு பழமையான கல்லணையானாலும்,சென்னை பல்கலைக்  கழக கட்டிடமானாலும் சரி இவையெல்லாம் வேண்டும்.

கட்டிடக்  கலை குறித்து விச்சுவ  தர்மம்,விச்சுவ சாரம்,விருத்தம், தாவட்டம்,நளம், மயம்,பானு,கற்பாரியம்,இருப்பிடம்,அரிடிகம்,ஐந்திரம், மகாதந்திரம், சித்திரம், அதிசாரம் முதலிய முப்பத்தி இரண்டு நூல்கள் இருந்திருக்கின்றன. இவற்றில் மயன் எழுதியதாகச் சொல்லப்படும் மயம் என்கிற நூல் மட்டுமே செய்யுள் வடிவில் வழங்கிவருகிறது. இவை,மனையைத் தேர்ந்தெடுப்பது முதல்,கட்டிடத்தின் வடிவம்,அமைய வேண்டிய இடம்,பயண்படுத்த வேண்டிய மரம்,கல்,பூச வேண்டிய வண்ணம் எல்லாவற்றையும் சொல்கின்றன.

வீட்டில் பயன்படுத்த கூடாத மரங்கள்

jskdj

அத்தி,ஆல்,இச்சி,அரசு,புரசு,குச்சம்,இலந்தை,மகிழ்,விளா,நாவல் ஆகிய மரங்களை பயன்படுத்தக்கூடாது.இவை தவிர நெருப்பில் பாதி வெந்த மரங்கள்,கொடி சுற்றிய மரங்கள், யானை முறித்த மரங்கள்,புயலால் சாய்ந்த மரங்கள்,பாழடைந்த வீட்டில் பயன்படுத்திய மரங்கள்,கோவிலில் அல்லது சுடுகாட்டில் உள்ள மரங்களையும் வீடுகட்ட பயன்படுத்த கூடாது.

மரங்களில் மூன்று வகை.

 

mbb

மரங்களில் ஆண்,பெண்,அலி என மூன்று வகையுண்டு.இவற்றில் வீட்டின் வாசற்கால்,தூண்கள்,பலகணி போன்றவை உண்டாக்க ஆண் மரங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

உத்திரம்,விட்டம்,வளை,தாழ்வாரம் தாங்கிக் கட்டை ஆகியவற்றுக்கு பெண்மரங்கள் ஏற்றவை.சிறுவிட்டம்,சட்டம்,கைகள்,வேலி ஆகியவற்றுக்கு அலி மரங்களை பயன்படுத்தலாம்.இவையெல்லாம், அரண்மனை, செல்வர் மாளிகைகள், கோவில்கள்,அவை சார்ந்த கட்டிடங்களுக்காகச் சொல்லப்பட்டவை.

பெரும்பாலான வீடுகளுக்கு வெள்ளை அல்லது பாதி வெள்ளை மீதி காவி அடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.வீட்டின் அடிப்பாகத்திற்கு காவி வண்ணம் பூசுவதால் விஷ பூச்சிகள்.வீட்டிற்குள் வராது என்று நம்பினர்.மேல் பகுதியில் சுண்ணாம்பு அடித்தது வெளிச்சம் பரவுவதற்காக இருக்கலாம்.

skjhjk

வாசலில் பசும் சானத்தை கரைத்து மெழுகி ஒரு கோலமிட்டால் வீட்டலங்காரம் முடிந்தது.சாதாரண கூரை வீடுகளிலும்,செருகு ஓடு வேய்ந்த மக்கள் காரைவீடும் மங்களூர் ஓடும் வேய்ந்த காலத்தில் நான்கு கட்டு முதல் 16 கட்டு வீடுகள் தோன்றிய போதும்,ஆங்கிலேயர் அறிமுகம் செய்த பங்களாக்களைப் பார்த்து தளமிட்ட மாளிகைகள் கட்டப்பட்ட போதும் சரி,வீட்டுக்கு வண்ணமடிப்பதில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.

சமீபகாலமாக வாஸ்த்து சாஸ்த்திர கிறுக்கு.பிடித்த பிறகுதான் குக்கிராமங்களில் கூட கத்தரிப்பூ கலரிலும்,ஃபுளோரசண்ட் பச்சை நிறத்திலும் வீடுகள் தோன்றத் துவங்கின.இப்போது,உணவு,உள் அலங்காரம் ஆகியவற்றைத் தொடர்ந்து பாரம்பரிய கட்டுமான கலையின் பக்கமும் இளைய தலைமுறையினர் கவனம் திரும்பி இருக்கிறது.

எட்டுத்திக்கும் சென்று அறிவுச் செல்வங்களை கொண்டு வந்து சேர்ப்பதும் முக்கியம்தான்.அதற்கு முன் நம் முன்னோர்களின் கலைத்திறன் குறித்த ஆழ்ந்த ஆய்வுகள் வேண்டும்,செட்டி நாடு பகுதியிலும்,கேரளத்திலும் உள்ள பழைய வீடுகள்,தஞ்சை,திருவையாறு பகுதிகளில் 400 ஆண்டுகள் கழிந்தும் உறுதியாக நிற்கும் வளைகூரை வீடுகளின் செங்கல் கட்டுமான ரகசியங்களையும் கற்றறிய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மூச்சுத் திணற வைக்கும் கான்கிரீட் வீடுகளுக்கு பதில் குறைந்த செலவில் பாதுகாப்பான வீடுகளை உருவாக்க வேண்டும்.

 

இதையும் வாசிங்க

அடிக்கடி உங்கள் முகம் கருத்துப்போகிறதா…கவலைப்படாதீங்க: இதை ட்ரை பண்ணினால் போதும்!