பள்ளி மாணவியிடம் செல்போனை பறித்து சென்ற திருநங்கை! 

 

பள்ளி மாணவியிடம் செல்போனை பறித்து சென்ற திருநங்கை! 

பள்ளி மாணவியிடம் செல்போன் பறித்து சென்ற திருநங்கையை காவல்துறையினர் கைது செய்தனர். 

பள்ளி மாணவியிடம் செல்போன் பறித்து சென்ற திருநங்கையை காவல்துறையினர் கைது செய்தனர். 

சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியைச் சேர்ந்தவர் தீபக் கோயல். அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 26-ம்தேதி இவரது மகள் டியூசன் சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். 

அண்ணாநகர் சாந்தி காலனி 5-வது தெருவில் நடந்து சென்றபோது திருநங்கை ஒருவரும் பெண் ஒருவரும் சிறுமியை மறித்து விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றனர். அதிர்ச்சியடைந்த சிறுமி தனது தந்தை தீபக்கிடம் தெரிவித்தார். 

உடனே தீபக் இது தொடர்பாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதே பகுதியில் உள்ள சிசிடிவியில் செல்போன் பறித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் பைக்கில் செல்லும் சிசிடிவி காட்சிகளும் பதிவாகி இருந்தது.

இதையடுத்து அண்ணாநகர் போலீசார் பைக் எண்ணை வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட திருநங்கை  மற்றும், அயப்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ், அம்மு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.