பள்ளி மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சி: சிறுமி தப்பியது எப்படி?

 

பள்ளி மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சி: சிறுமி தப்பியது எப்படி?

தாம்பரம் அருகே சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவியை கொலை செய்ய முயற்சி நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: தாம்பரம் அருகே சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவியை கொலை செய்ய முயற்சி நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே பள்ளியில் +1 படித்து வரும் 16 வயது மாணவி ஒருவர் சாலையில் நடந்து வந்துள்ளார். அப்போது, அவரை காரில் வந்த 3 பெண்கள் வழிமறித்து, அந்த மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றுள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக சத்தமாக கூச்சலிட்டுள்ளார். மாணவியின் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், உடனடியாக மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்துள்ள சேலையூர் போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.