“பள்ளிக்கு சென்ற சிறுமி பள்ளிக்கு பக்கத்துலே புதைக்கப்பட்டார்”-கொத்தனார் செய்த கொடுமை….
நாட்டில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடம் இல்லை என்று தெரிகிறது. சிறார்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக POCSO போன்ற கடுமையான சட்டங்களை அறிவித்த பிறகும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை .
நாட்டில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடம் இல்லை என்று தெரிகிறது. சிறார்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக POCSO போன்ற கடுமையான சட்டங்களை அறிவித்த பிறகும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை .
உத்தரபிரதேச மெயின்பூரி மாவட்டத்தில் ,10 வயது சிறுமி அவருக்குத் தெரிந்த ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டார். பின்னர் அவரது உடலை ஒரு தொடக்கப்பள்ளிக்கு பின்னால் புதைத்துள்ளனர்.
திங்கள்கிழமை காலை 10 வயது சிறுமியை வீட்டிலிருந்து பள்ளிக்கு ஒரு நபர் அழைத்துச் சென்றுள்ளார் அந்த நபரை தனக்குத் தெரியுமென்பதால் சிறுமி எந்தவித தயக்கமும் இல்லாமல் அந்த நபருடன் சென்றார். பின்னர் அவர் அந்த சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்லாமல் தான் கொத்தனாராக பணிபுரியும் இடத்திற்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பள்ளிக்கு சென்ற சிறுமி மாலை வரை வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் அவளைத் தேடத் தொடங்கினர். அடுத்த நாள் ஒரு உள்ளூர் பெண் சிறுமியின் உடலைப் பள்ளிக்கூடத்திற்கு பின்னால் கண்டு அவரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்.பெற்றோர்கள் போலீசில் புகாரளித்ததால் போலீசார் விசாரித்து
மேசனாக பணிபுரியும் 23 வயது நபரை கைது செய்யப்பட்டுள்ளார்கள். பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.