பலாத்காரமும் செய்தார், பஞ்சாயத்தும் செய்தார்-தோல்வியில் சமாதான பேச்சு… அப்புறம் ஆசிட் வீச்சு  

 

பலாத்காரமும் செய்தார், பஞ்சாயத்தும் செய்தார்-தோல்வியில் சமாதான பேச்சு… அப்புறம் ஆசிட் வீச்சு  

ஹப்பூரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்  அதற்கு பிறகு நடந்த சமாதான பேச்சு தோல்வியடைந்ததால்   ஆசிட் வீசி தாக்கப்பட்டார்.

ஹப்பூரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்  அதற்கு பிறகு நடந்த சமாதான பேச்சு தோல்வியடைந்ததால்   ஆசிட் வீசி தாக்கப்பட்டார்.

ஒரு மைனர்சிறுமி  2019 ஜூன் மாதம் தில்ஷாத் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பாபுகர் காவல் நிலைய பொறுப்பாளர் உத்தம் சிங் ரத்தோர் தெரிவித்தார். பலாத்காரம் செய்த தில்ஷாத் தன் உறவினரைஅனுப்பி பஞ்சாயத்து செய்தார். ஆனால் பஞ்சாயத்து பேச்சு வார்த்தை தோல்வியுற்றதால் கோபமான அவர் அந்த பெண் மீது அமிலம் வீசி தாக்கினார் 

குற்றம் சாட்டப்பட்ட தில்ஷாத் சிறுமியின் காலில் ஆசிட் வீசிவிட்டு, “சமாதானமாகவில்லையென்றால் அடுத்த முறை உன் முகத்தில் வீசுவேன்” என்று கூறிவிட்டு தப்பி ஓடியதாக அவர்கள் குற்றம் சாட்டினர். பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிட் தாக்குதளுக்குண்டான  பெண்ணின்  குடும்பத்துக்கும் அவர்களுக்கும்  இடையிலான தகராறின் விளைவாக இது நடந்தது  என்றும் ,இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்  போலீசார் தெரிவித்தனர்.