‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு ரஜினிகந்த் பாராட்டு: நெகிழ்ச்சியில் பா.ரஞ்சித்!

 

‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு ரஜினிகந்த் பாராட்டு: நெகிழ்ச்சியில் பா.ரஞ்சித்!

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை: ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

‘காலா’ இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்துக்கு மக்களிடத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது. கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடித்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தை அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஆணவக் கொலைகள் விபத்துக்களாகவும், தற்கொலைகளாகவும் சித்தரிக்கப்பட்டு மூடி மறைக்கப்படுவதை, வன்மத்தை தூண்டாமல் நடுநிலையாகவும், மிக எளிமையாகவும் சொல்லப்பட்டுள்ளது. இது விமர்சனம் மற்றும் வசூல் ரீதியில் மட்டுமல்லாமல் மக்களிடமும், திரை பிரபலங்களிடமும் பாராட்டுக்களை குவித்தது.

இந்நிலையில், பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் பா.ரஞ்சித் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜை அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். ஒரு நாவலை போன்று படத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். பல இடங்களில் சிலிர்த்துவிட்டேன். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. ஓர் அதிர்வை ஏற்படுத்திவிட்டீர்கள்’ என்று பாராட்டியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாராட்டுக்கு நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது ட்வீட்டில், பரியேறும் பெருமாள் குறித்த ரஜினியின் சமூக அக்கறையும், கனிவு நிறைந்த அன்பும், உணர்ச்சி மிகுந்த பாராட்டும் பெரும் உற்சாகத்தைத் தருவதாக ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.