பரபரப்பான இந்தியா ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

 

பரபரப்பான இந்தியா ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

இன்றைய உலகக்கோப்பை போட்டியில் இந்தியா அணி ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்தது.

இன்றைய உலகக்கோப்பை போட்டியில் இந்தியா அணி ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்தது.

இந்தியா – ஆப்கான் அணிக்கு இடையிலான போட்டி சவுதம்டன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 67 ரன்கள் அடித்தார். இதையடுத்து 225 ரன்கள் என்ற இலக்குடன் ஆப்கான் களமிறங்கியது. ஸ்பின் பந்துவீச்சு நன்றாக ஒர்க் அவுட் ஆன நிலையிலும், இந்திய அணி கேப்டன் வேகப்பந்து வீச்சை வைத்தே பவுலிங் அட்டாக்கை தொடங்கியுள்ளார். ஷமி, பும்ரா தொடக்கத்தில் பவுலிங் செய்தனர்.

ஷமி ஓவரில், ஹஸ்ரதுல்லா சசாய் 10 ரன்களில், தனது ஆஃப் ஸ்டம்ப்பை பறிகொடுக்க, ஆப்கன் தனது முதல் விக்கெட்டை இழந்து 55 ரன்களுடன் விளையாண்டது. ஆப்கானிஸ்தான் 24 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்திருந்தது. 46.3வது ஓவரில், ஆப்கானிஸ்தான் 200 ரன்களை எடுத்து விளையாடிவந்தது. இருப்பினும் இறுதியாக  50 ஓவர் முடிவில்  213 ரன்களை மட்டுமே ஆப்கானிஸ்தான் எடுத்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றிப்பெற்றது.