பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆரம்பம் :அமைச்சர் செங்கோட்டையன்  

 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆரம்பம் :அமைச்சர் செங்கோட்டையன்  

12 ஆம் வகுப்புக்கான தேர்வை எழுதாத மாணவர்களுக்கு ஜூன் 4-ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். 

ஜூன் 1 முதல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

 

கொரோனா வைரஸ் தொற்றால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த தேர்வுகள் மே மாதம் நடத்தப்படும் என்றும் ஒரு வாரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஏற்கனவே அமைச்சர் செங்கோட்டையன் கூறும் போது, ” 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயமாக நடைபெறும்.  ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில் 1 ஒரு நாள் விடுமுறை இருக்கும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, மே மாதம் 3 ஆம் தேதிக்கு பிறகு தேர்வு எப்போது நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் 10 ஆம் வகுப்பு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதே தவிர, ரத்து செய்யப்படவில்லை என்றும் கூறினார். 

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளார், ப்ளஸ் 1 மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வுகள், ஜூன் 2-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று கூறியுள்ள அவர், பேருந்து வசதி இல்லாததால் மார்ச் 24-ஆம் நாள் நடைபெற்ற 12 ஆம் வகுப்புக்கான தேர்வை எழுதாத மாணவர்களுக்கு ஜூன் 4-ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.