பண மோசடியில் கைதான தாயார்: நிகழ்ச்சியிலிருந்து வெளியேற அடம்பிடிக்கும் கவின்?

 

பண மோசடியில் கைதான தாயார்: நிகழ்ச்சியிலிருந்து வெளியேற அடம்பிடிக்கும் கவின்?

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் காதல் மன்னனாக வலம் வருபவர் கவின்.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் காதல் மன்னனாக வலம் வருபவர் கவின். சாக்ஷியை கழட்டி வீட்ட பின்பு லாஸ்லியாவுடன் கல்யாணம் செய்துகொள்ளும் அளவிற்குச் சென்றுள்ளார். அதனால் நாளுக்கு நாள் இவர்களின் காதல் லீலையின் ஆட்டம் கூடிக்கொண்டே செல்கிறது. 

இது ஒரு பக்கம் இருக்க கவினின் தயார் ராஜலட்சுமி சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்ததற்கான வழக்கு, நேற்று திருச்சி நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் கவின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட இரண்டு ஆண்கள் சம்மந்தப்பட்டிருந்தனர். அதில் இரண்டு பேர்கள் இறந்துள்ளதால் மீதமிருக்கும் மூன்று பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் அவர்கள் மோசடி செய்தது நிரூபணமாகியுள்ளது. அதனால் அவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கவின்

இந்த விஷயம் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் கவினுக்குத் தெரியவர அவர் உடனே பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று அடம்பிடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.