பண மழையில் நனையவைத்த ஏ.டி.எம்! மகிழ்ச்சியில் உறைந்துபோன வாடிக்கையாளர்கள்!!

 

பண மழையில் நனையவைத்த ஏ.டி.எம்! மகிழ்ச்சியில் உறைந்துபோன வாடிக்கையாளர்கள்!!

அரக்கோணத்தில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் நாம் தேர்வு செய்த தொகைக்கு அதிகமாக பணம் வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் உறைந்தனர். 

அரக்கோணத்தில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் நாம் தேர்வு செய்த தொகைக்கு அதிகமாக பணம் வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் உறைந்தனர். 

வேலூர் மாவட்டம், அரக்கோணம்-காஞ்சிபுரம் சாலையில் எஸ்.ஆர். கேட் பகுதியில் அமைந்துள்ள தேசியமாக்கப்பட்ட ஏ.எடி.எம் இயந்திரத்தில் நேற்று வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க முயன்றுள்ளார். நமது வங்கிக்கணக்கில் உள்ள பணத்தில் எவ்வளவு ரூபாய் வேண்டும் என்று குறிப்பிடுகிறோமோ? அந்த ரூபாய் மட்டுமே ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து வரும். ஆனால் அவர் ஏ.டி.எம் கார்டை இயந்திரத்துக்குள் போட்டு ரூ.1,000 எடுக்க பட்டனை அழுத்தினார். அப்போது அவருக்கு ரூ.5 ஆயிரம் வந்தது. இதனால் அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த 50 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் அந்த ஏடிஎம் இயந்திரத்தின் முன்னால் குவிந்தனர். பலரும் குறைவான தொகையை ஏ.டி.எம்மில் குறிப்பிட்டு அதிக தொகையை எடுத்து சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் ஏ.டி.எம். மையத்தை உடனடியாக மூடிவிட்டு வங்கி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். ஆய்வு நடத்திய அதிகாரிகள், கம்ப்யூட்டரில் ஏற்பட்ட கோளாறே இந்த தவறுக்கு காரணம் என்பதை கண்உப்பிடித்தனர்.  தற்காலிகமாக அந்த ஏ.டி.எம்மில் பணபரிவர்த்தனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.