பணம் கொடுங்க… விஜயகாந்த் -பிரேமலதாவை கூட்டி வர்றேன்… அடம்பிடிக்கும் தேமுதிக நிர்வாகி..!

 

பணம் கொடுங்க… விஜயகாந்த் -பிரேமலதாவை கூட்டி வர்றேன்… அடம்பிடிக்கும் தேமுதிக நிர்வாகி..!

விஜயகாந்த் – பிரேமலதாவை கூட்டி வருவது, பணம் பட்டுவாடா செய்வதையெல்லாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் இடத்தை காலி பண்ணுங்க’ என விரட்டாத குறையாக அனுப்பி விட்டாராம்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிரும் முத்துசோழன்  போட்டியிடுகிறார். அவர் மரியாதை நிமித்தமாக தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் வெங்கடேசனை  சந்தித்து பேசி இருக்கிறார். 

அப்போது அவர் ‘தே.மு.தி.க., தொடர்பான பணப் பட்டுவாடாவை, நான் தான் கவனிப்பேன்’ என அதிமுக வேட்பாளரிடம் கூறியிருக்கிறார்.  அதற்கு அதிமுக வேட்பாளர், ‘உள்ளூர் அமைச்சரான சி.வி.சண்முகம் தான் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார்’’ எனக் கூறி விட்டாராம். 

vijayakanth

அப்படிச் சொல்லியும் கேட்காத மாவட்ட செயலாளர் வெங்கடேசன், அமைச்சர்  சி.வி.சண்முகத்தை போய் நேரில் சந்தித்து ‘பிரசாரத்துக்கு விஜயகாந்தையும், பிரேமலதாவையும் அழைத்து வருகிறேன். தேர்தல் பணத்திற்கான செலவு பணத்தை மட்டும் என்னிடம் கொடுங்கள் எனக் கேட்டிருக்கிறார்.

இதனால் டென்ஷனான சி.வி.சண்முகம், ’’விஜயகாந்த் – பிரேமலதாவை கூட்டி வருவது, பணம் பட்டுவாடா செய்வதையெல்லாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்.  நீங்கள் இடத்தை காலி பண்ணுங்க’ என விரட்டாத குறையாக அனுப்பி விட்டாராம்.  இந்த விஷயம், தே.மு.தி.க., தலைமைக்கு போயிருக்கிறது. இதனால் என்ன நடக்குமோ என விரக்தியாகி கிடக்கிறார் வெங்கடேசன்.