பட பெயரை வெளியிட்டதால் ராஷ்மிகா மீது கடுப்பான படக்குழு

 

பட பெயரை வெளியிட்டதால் ராஷ்மிகா மீது கடுப்பான படக்குழு

நடிகை ராஷ்மிகா படத்தின் பெயரை வெளியிட்டதால் அவர் மீது படக்குழு செம கடுப்பில் உள்ளனர். 

சென்னை: நடிகை ராஷ்மிகா படத்தின் பெயரை வெளியிட்டதால் அவர் மீது படக்குழு செம கடுப்பில் உள்ளனர். 

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம்’ மற்றும் டியர் காம்ரேட் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா. அதைத்தொடர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வருகிறார். 

அந்த வகையில் இவர் தமிழில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் S R பிரபு தயாரிக்கும் அந்த படத்தில் நெப்போலியன், யோகி பாபு, சதீஸ், மலையாள நடிகர் லால் ஆகியோர் நடித்து வருகின்றனர். 

rashmika

இந்த நிலையில் இந்த படத்தின் பெயரை வித்தியாசமான முறையில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதை கெடுக்கும் விதமாகப் படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுல்தான் பட ஷூட்டிங்க்கில் 4 ஆம் நாள் எனக் குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதனால் படக்குழு அவர் மீது கடும் கோபத்தில் உள்ளதாம்.