படுத்தேவிட்டது பதஞ்சலி விற்பனை! பாபா ஒழுங்கா யோகா செய்யலையோ?

 

படுத்தேவிட்டது பதஞ்சலி விற்பனை! பாபா ஒழுங்கா யோகா செய்யலையோ?

பதஞ்சலி மருந்துகளை சாப்பிட்டால், மூட்டுவலி குறையும் என லண்டன் மருத்துவமனையில் மூட்டு அறுவைசிகிச்சை செய்துகொண்டே விளம்பரம் செய்ததும் எடுபடவில்லை. சிம் கார்டு, சோலார் பேனல், தண்ணீர் பாட்டில், ஜீன்ஸ் என பாபா கைவைக்காத பொருள் இல்லை. ஆனாலும், விற்பனை குறைந்துவிட்டது

லோக்பால் சட்டத்தை அமல்படுத்தவேண்டும் என அன்னா ஹசாரேவுடன் சேர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தியதால் நாடு முழுவதும் பிரபலமடைந்த பாபா ராம்தேவ், அந்த பிரபலத்தையே முதலீடாகக் கொண்டு பதஞ்சலி நிறுவனத்தை தொடங்கினார். காங்கிரஸ் அரசு கவிழ்ந்தால், பாஜக ஆட்சியில் லோக்பால் உடனடியாக கொண்டுவரப்படும் என்பது ராம்தேவ், ஹசாரே போன்ற பாஜக அனுதாபிகளின் அபிலாசை என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

Ramdev - Hazare

அவர்கள் ஆசைப்படியே பாஜகவும் வந்தது. ஆனால், லோக்பால்தான் வரவே இல்லை. ஏன் லோக்பால் சட்டத்தை கொண்டுவரவில்லை என பாபா ராம்தேவ் வெறிகொண்டு பாஜகவினரிடம் போய் கேட்க, அவர்கள் சிம்பிளாக ஒரு பதில் சொன்னார்கள். லோக்பால் பத்தி நீ கண்டுக்காதே, பதஞ்சலியப் பத்தி நாங்க கண்டுக்க மாட்டோம் என சொல்லை, பட் அந்த டீலிங் ராம்தேவுக்கு பிடித்துவிட்டது. ஓக்கே சொல்லிவிட்டு படபடவென பதஞ்சலி மூலம் 2500 பொருட்களை தயாரிக்க துவங்கிவிட்டார்.

Patanjali Products

இந்தியில் டப் செய்யப்பட்ட சூரிய வம்சம் உள்ளிட்ட பல விக்ரமன படங்களை பாபா பார்த்திருப்பார் போல. அப்படி ஒரு அபார வளர்ச்சி. எந்தளவு வளர்ச்சி என்றால், 20115-16ஆம் நிதியாண்டில் 5,000 கோடியாக இருந்த பதஞ்சலியின் வருமானம்,  ஒரே வருடத்தில் பத்தாயிரம் கோடியாக உயர்ந்தது. அதற்கடுத்த ஆண்டு இருபதாயிரம் கோடியாக வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபோது தான் உண்மை உரைத்திருக்கிறது. முந்தைய ஆண்டை காட்டிலும் குறைவான அதாவது 8,148 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே பதஞ்சலியில் விற்பனை நடந்திருக்கிறது.

Patanjali

விற்பனையில் கவனத்தைக் குவித்த பாபா, தரத்தில் கோட்டைவிட்டுவிட்டார். பதஞ்சலி மருந்துகளை சாப்பிட்டால், மூட்டுவலி குறையும் என லண்டன் மருத்துவமனையில் மூட்டு அறுவைசிகிச்சை செய்துகொண்டே விளம்பரம் செய்ததும் எடுபடவில்லை.  சிம் கார்டு, சோலார் பேனல், தண்ணீர் பாட்டில், ஜீன்ஸ் என பாபா  கைவைக்காத பொருள் இல்லை. ஆனாலும், விற்பனை குறைந்துவிட்டது. காங்கிரஸ் கடந்த தேர்தலில் தோற்றதற்கு காரணம், ராகுல் யோகா செய்யாததன் என்று சொல்லிய பாபா, யோகாவை முறையாக செய்திருந்தால் அவருடைய நிறுவனமும் தொடர்ந்து வளர்ந்திருக்குமோ என்னவோ?