படுக்கையறையில் மனைவி, கள்ளக்காதலிக்கு நடுவில் திமுக நிர்வாகி: ஆதரவு தரும் துரைமுருகன்; வைரல் வீடியோவால் அதிர்ச்சியில் திமுகவினர்!

 

படுக்கையறையில் மனைவி, கள்ளக்காதலிக்கு நடுவில் திமுக நிர்வாகி: ஆதரவு தரும் துரைமுருகன்; வைரல் வீடியோவால்  அதிர்ச்சியில் திமுகவினர்!

வாணியம்பாடி தொகுதியில்  உள்ள திமுக நிர்வாகிகள் துரைமுருகனை சந்தித்து மீண்டும் சாரதி குமாருக்கு கட்சி பொறுப்பு அளிக்குமாறு முறையிடுகிறார்கள்.

வாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதி குமார். இவருக்கும் சென்னை அடையார் பகுதியை சேர்ந்தவர் ரம்யா என்பவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து  ரம்யா தனது கணவர் சாரதி குமாருக்கு அவரை விட  14 வயது அதிகமான பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதாகவும், அவருடன் சேர்ந்து  தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்  அளித்தார்.

 

 அந்த புகாரில்,  திருமணம் ஆன நாளிலிருந்து எங்கு சென்றாலும் அந்த பெண்ணையும் கூட்டிக்கொண்டு வருகிறார். படுக்கையில் கூட அவரையும் பக்கத்தில் படுக்கவைத்துக் கட்டிப்பிடித்துக் கொள்வார். அதை கேட்டால் உன்ன பார்வை தான் தப்பு அவங்க என் அக்கா மாதிரி’ என்று கூறி என்னை ஐந்து துன்புறுத்துவர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும்  ‘இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலினிடம் புகார் தெரிவித்தேன்.

அப்போது என்னை அறிவாலயத்தில் வைத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். என்னிடம் இருந்த பணம், நகைகளை பறித்துக்கொண்டு என் குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்’என்று ரம்யா அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனால் சமுகவலைதளங்களில் திமுகவை வறுத்தெடுத்து வந்த நிலையில், வேலூர் மேற்கு மாவட்டம், வாணியம்பாடி நகரக் கழகப் பொறுப்பாளர் பதவியிலிருந்து வி.எஸ்.சாரதி குமார் நீக்கப்படுவதாகத் தலைமை கழகம் அறிவித்தது.

இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் சாரதி குமாருக்கு ஆதரவாக பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், வாணியம்பாடி தொகுதியில்  உள்ள திமுக நிர்வாகிகள் துரைமுருகனை சந்தித்து மீண்டும் சாரதி குமாருக்கு கட்சி பொறுப்பு அளிக்குமாறு முறையிடுகிறார்கள்.

 

அதை கேட்ட துரைமுருகன், என்னை பொருத்த வரையில் அவன் நல்லது பண்ணுகிறானோ, கெட்டது பண்றானோ கேட்க மாட்டேன். நான் தளபதி கிட்ட சாரதி எனக்கு வேண்டும், வாணியம்பாடிக்கு வேண்டும். என்று சொல்லுறேன். நீங்க இப்போ பேசாம போங்க… அமைதியா  போங்க ‘ என்று கூறி அனுப்புகிறார். இந்த வீடியோவானது  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.