படிக்க சென்ற இந்திய மாணவர் லண்டனில் மாரடைப்பால் மரணம் -உடலை கொண்டு வர உதவி கேட்டு அரசிடம் மனு …

 

படிக்க சென்ற இந்திய மாணவர் லண்டனில் மாரடைப்பால் மரணம் -உடலை கொண்டு வர உதவி கேட்டு அரசிடம் மனு …

தெலுங்கானா மாநிலத்தில் வாரங்கல் மாவட்டம் ,ராம்நகர் கிராமத்தில் – சாரதா மற்றும் குமாரசாமி தம்பதிகளின் 26 வயது மகன் சதிஷ், லண்டனில் நேற்று மாரடைப்பால் காலமானார். 

தெலுங்கானா மாநிலத்தில் வாரங்கல் மாவட்டம் ,ராம்நகர் கிராமத்தில் – சாரதா மற்றும் குமாரசாமி தம்பதிகளின் 26 வயது மகன் சதிஷ், லண்டனில் நேற்று மாரடைப்பால் காலமானார். அவர் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர இந்த ஊரடங்கு நேரத்தில் உதவ கேட்டு மாநில அமைச்சர் கே.டி.ஆர். மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்ற ஆண்டு ஜனவரி மாதம் லண்டனுக்கு சதிஷ் மேல் படிப்புக்காக போனார் .இவர் சென்ற சனிக்கிழமை இரவு தனது பெற்றோருடன் போனில் தாம் நலமாக இருப்பதாக பேசியுள்ளார். ஆனால் மறுநாள் ஞாயிறன்று அவர் தன்னுடைய வீட்டில் மாரடைப்பால் இறந்து கிடந்ததாக அவரோடு தங்கியிருந்த மற்ற நண்பர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் கூறினார்கள். பிறகு அங்கு வந்த போலீஸ் இந்தியாவில் வசிக்கும் பெற்றோர்களுக்கு இந்த மகன் இறந்த தகவலை கூறியதும் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மேற்கொண்டு உடலை இந்தியாவுக்கு கொண்டு வந்து ஈமச்சடங்குகள் செய்ய அவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.