படப்பிடிப்பின் போது கேரவனுக்குள் சென்று அழுத நித்யா மேனன் – ஏன் தெரியுமா?

 

படப்பிடிப்பின் போது கேரவனுக்குள் சென்று அழுத நித்யா மேனன் – ஏன் தெரியுமா?

தன் மீது சில தயாரிப்பாளர்கள் தவறாக அவதூறு பரப்புகிறார்கள் என நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்.

சென்னை: தன் மீது சில தயாரிப்பாளர்கள் தவறாக அவதூறு பரப்புகிறார்கள் என நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்.

தமிழில் வெப்பம் படத்தின் மூலம் அறிமுகமாவனர் நடிகை நித்யா மேனன். மலையாள நடிகை என்றாலும் தமிழ் படங்கள் மூலமே பிரபலமடைந்தார். இவர் தற்போது ஜெயலலிதா வாழ்க்கை படமான ‘த அயன் லேடி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார்.

nithya menon

நித்யா மேனன் சமீப காலமாக தயாரிப்பாளர்களை மதிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘என்னைப் பற்றி தயாரிப்பாளர்கள் சிலர் அவதூறு பரப்பி வருகிறார்கள். நான் ராஜீவ் குமார் இயக்கும் ‘தள்சமயம் ஒரு பெண்குட்டி’ மலையாள படத்தில் நடித்துக் கொண்டு இருந்த போது எனது தாய்க்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.  இதனால் படப்பிடிப்பு நடுவில் கேரவனுக்குள் சென்று அழுவேன். எனக்கு மைக்ரேன் தலைவலியும் இருந்தது. அம்மாவை நினைத்தும், எனக்கு ஏற்பட்டுள்ள மைக்ரேன் தொல்லையாலும் அழுது கொண்டு இருந்தபோது பல தயாரிப்பாளர்கள் புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய என்னை சந்திக்க வந்தார்கள்.

nithya menon

அவர்கள் யார் என்று கூட எனக்கு தெரியாது. அவர்களை அப்புறம் சந்திக்கிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டேன். அது தயாரிப்பாளர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தி விட்டது. அவர்களுடன் பேசாத காரணத்தால் நான் திமிர் பிடித்தவள் என்று வெளியில் தவறாக பரப்பி வருகின்றனர்’ என்று தன்னை பற்றி பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.