பஞ்சாப்பை பந்தாடிய விராட் கோஹ்லி படை; மிரட்டல் வெற்றி பெற்று அசத்தல் !!

 

பஞ்சாப்பை பந்தாடிய விராட் கோஹ்லி  படை; மிரட்டல் வெற்றி பெற்று அசத்தல் !!

பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. 

பெங்களூர்: பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. 

ஐ.பி.எல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. 

rcb

பெங்களூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப்  அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு டிவில்லியர்ஸ் 83 ரன்கள் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 202 ரன்கள் எடுத்தது. 

punjab

இதனையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கிரிஸ் கெய்ல் 23 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான கே.எல் ராகுல் 43 ரன்கள் எடுத்தார். 

punjab

அடுத்தடுத்து களமிறங்கிய மாயன்க் அகர்வால் 35  ரன்களும், டேவிட் மில்லர் 24 ரன்களும், நிக்கோலஸ் பூரான் 46 ரன்கள் எடுத்து கைகொடுத்தாலும் கடைசி மூன்று ஓவர்களில் பஞ்சாப் வீரர்கள் ரன் எடுக்க தவறி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று, இந்த தொடரில் தனது நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதையும் வாசிக்க: பெங்களூர் அணிக்கு புதிய சோதனை; வேதனையில் ரசிகர்கள் !!