பசி என்ற நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிச்சா நல்லா இருக்கும்- விஜய்சேதுபதி ட்வீட்

 

பசி என்ற நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிச்சா நல்லா இருக்கும்- விஜய்சேதுபதி ட்வீட்

நடிப்புத் திறமையால் மட்டுமே தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. பீட்சா, நடுவுல கொஞம் பக்கத்த காணோம் என ஆரம்பித்த விஜய் சேதுபதியின் திரை பயணம்  இன்று அவரை சூப்பர் ஸ்டாருடன் இணைந்து பேட்ட வரை வந்துள்ளது. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ பசி என்றொரு நோய் இருக்கு… அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும் … ஓ மை கடவுளே” என குறிப்பிட்டுள்ளார். 

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தப்பட்ட பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கூலித்தொழிலாளிகள் உணவு கிடைக்காமல் தவித்துவருகின்றனர். வைரஸ் வந்து மடிவதற்குள் பசியால் ஏழைமக்கள் இறக்கக்கூடும் என ஐநா கவலை தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட சில இடங்களில் தன்னார்வலர்கள் ஏழைமக்களின் பசியை போக்கிவருகின்றனர். இந்த சூழலில் விஜய்சேதுபதி ட்விட்டரில் இதுபோன்று கருத்து தெரிவித்துள்ளார்.