நேற்று போல இன்றும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது – சென்னை வானிலை மையம்

 

நேற்று போல இன்றும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது – சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த கோடை மழையால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இருந்தாலும் மழை காரணமாக நோய்த் தொற்றுகள் பரவ அதிக வாய்ப்புள்ளதாகவும் மக்கள் கொஞ்சம் அச்சம் அடைந்துள்ளனர். சென்னையிலும் பல பகுதிகளில் நேற்று மாலை வேளையில் சிறிது நேரம் பலத்த மழை பெய்தது.

chennai

இந்நிலையில், நேற்று போலவே இன்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.