நேர்கொண்ட பார்வை ஸ்பெஷல் ஷோ: என்ன விமர்சனம்’னு நீங்களே பாருங்க…
இந்த நிலையில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ஸ்பெஷல் ஷோ இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் திரையிடப்பட்டது. அதில் போனி கபூர் குடும்பத்தினர்,அருண் விஜய், தீபக், கார்த்திக் ஸ்ரீனிவாஸ் மற்றும் அஜித்தின் மனைவி ஷாலினி ஆகியோர் சென்று படத்தை பார்த்துள்ளனர்.
சென்னை: நேர்கொண்ட பார்வை ஸ்பெஷல் ஷோ பார்த்து விட்டு பிரபலங்கள் தங்களது விமர்சனங்களை கூறியுள்ளனர்.
தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேறப்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ஸ்பெஷல் ஷோ இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் திரையிடப்பட்டது. அதில் போனி கபூர் குடும்பத்தினர்,அருண் விஜய், தீபக், கார்த்திக் ஸ்ரீனிவாஸ் மற்றும் அஜித்தின் மனைவி ஷாலினி ஆகியோர் சென்று படத்தை பார்த்துள்ளனர்.
#thalaajith #naerkondapaarvai preview show by #boneykapoor #arjunkapoor thanks #sanjayramaswamy .Great movie .Treat for #thala #ajith fans @arunvijayno1 @sskarthik #karthiksrinivasanphotography #karthiksrinivasan #naerkondaparvai #pink #pinkmovie #thalaajithfans @arjunkapoor pic.twitter.com/D95Y40YyF6
— karthik srinivasan (@sskarthik) August 2, 2019
படத்தை பார்த்தவர்கள் அஜித்தின் நடிப்பு மிகவும் இயல்பாக இருப்பதாகவும், மிகவும் மாஸ்ஸாக நடித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். படத்தின் முதல் விமர்சனமே பாசிட்டிவ் ஆக வந்துள்ளதால் அஜித் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.