நேர்கொண்ட பார்வை படம் பார்த்து வருபவர்களுக்கு விதை பந்து கொடுத்து அசத்திய தல ரசிகர்கள்! 

 

நேர்கொண்ட பார்வை படம் பார்த்து வருபவர்களுக்கு விதை பந்து கொடுத்து அசத்திய தல ரசிகர்கள்! 

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்தில் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 

உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை இன்று வெளியாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் திரையரங்கிற்குச் சென்று பார்த்து மகிழ்கின்றனர்.இந்த நிலையில் பொதுவாக ஒரு ஹீரோ படம் வெளியானால் அவரது ரசிகர்கள் வெளியே பேனர் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். 

ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சில அஜித் ரசிகர்கள் படம் பார்த்து வருபவர்களுக்கு வித்தியாசமான பரிசு ஒன்றைக் கொடுத்துள்ளனர். ஆம்…திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீனிவாசா திரையரங்கில் படம் பார்த்து வருபவர்களுக்கு அஜித் ரசிகர்கள் விதைப்பந்து கொடுத்து அஸ்தியுள்ளனர். மேலும் இந்த விதை பந்துகளை மரங்கள் இல்லாத இடத்தில் விதைக்குமாறு அவரது ரசிகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.