நேருக்கு நேர் மோதிய லாரிகள்: 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் எரிந்து சேதம்!

 

நேருக்கு நேர் மோதிய லாரிகள்: 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் எரிந்து சேதம்!

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரியுடன் டாஸ்மாக் மதுபானம் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் இரண்டு லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன.

கடலூர்: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரியுடன் டாஸ்மாக் மதுபானம் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் இரண்டு லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன.

கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே இன்று அதிகாலை தொழுதூர் அருகே டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றிச் சென்ற லாரி திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மணல் லாரி டாஸ்மாக் லாரியின் டீசல் டேங்க் மீது வேகமாக மோதியது. இதனால் இரு லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன. 

மணல் லாரி ஓட்டுநர் படுகாயமடைந்ததை தொடர்ந்து, தீக்காயங்களுடன்  பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சத்துவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர்.

தீப்பிடித்த சரக்கு லாரியில் இருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்புடைய மதுபானங்கள் முழுவதும் எரிந்து சாம்பலாகின. இரண்டு லாரிகளும் முழுவதுமாக சேதம் அடைந்ததால் மொத்தம் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒருமணி நேரத்திற்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.