நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரண்டு தனியார் பேருந்துகள்: 20 பேர் படுகாயம் !

 

நேருக்கு நேர் மோதிக்கொண்ட  இரண்டு தனியார் பேருந்துகள்: 20 பேர் படுகாயம் !

உளுந்தூர் பேட்டை புறவழி சாலை,சென்னை-திருச்சி தடத்தில் இன்று அதிகாலை எதிரெதிரே இரண்டு தனியார் பேருந்துகள் சென்று கொண்டிருந்துள்ளன. தி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை புறவழி சாலை சென்னை-திருச்சி தடத்தில் இன்று அதிகாலை எதிரெதிரே இரண்டு தனியார் பேருந்துகள் சென்று கொண்டிருந்துள்ளன. திடீரென அந்த இரண்டு பேருந்தும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் பேருந்துகளின் உள்ளே இருந்த 20 பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. 

bus

இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதியும் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.