நேருக்கு நேராக மோதிய பேருந்து மற்றும் மினி வேன்: 9 பேர் உயிரிழப்பு!

 

நேருக்கு நேராக மோதிய பேருந்து மற்றும் மினி வேன்: 9 பேர் உயிரிழப்பு!

சேலத்திலிருந்து சென்னை நோக்கி  தனியார் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அதே போல்  சென்னையிலிருந்து காங்கேயம் நோக்கி சென்ற மினி வேனும் ஒன்றும் சென்றுகொண்டிருந்தது

கள்ளக்குறிச்சி: தனியார் பேருந்தும் மினி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

accident

சேலத்திலிருந்து சென்னை நோக்கி  தனியார் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அதே போல்  சென்னையிலிருந்து காங்கேயம் நோக்கி சென்ற மினி வேனும் ஒன்றும் சென்றுகொண்டிருந்தது. இன்று அதிகாலை 3 மணியளவில்  கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேர் என்ற இடத்தில் என்ற இடத்தில் இந்த தனியார் பேருந்தும், மினி வேனும்  நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து படுகாயம் அடைந்த 5 பேருக்கும் மேற்பட்டோர், சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது  குறித்து  வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

accident

மேலும் உயிரிழந்தவரின் உடல்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஓட்டுநரின்  கவனக்குறைவால் இந்த விபத்து  ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.