நேரில்  சென்று பாராட்டிய தோழர்.நல்லகண்ணு…உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள் !? 

 

நேரில்  சென்று பாராட்டிய தோழர்.நல்லகண்ணு…உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள் !? 

தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் பகுதிகளுக்கு லாரிகளில் தண்ணீர் கொண்டு போய் கொடுப்பது,பருவமழை வருவதற்குள் இருக்கும் குளங்களையெல்லாம் தூர்வாரி நீர் ஆதாரங்களை சேகரிக்க வழிவகை செய்யும் வேலையை நாம் தமிழர் கட்சி தொடங்கி ரொம்ப நாளாச்சு.

தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் பகுதிகளுக்கு லாரிகளில் தண்ணீர் கொண்டு போய் கொடுப்பது,பருவமழை வருவதற்குள் இருக்கும் குளங்களையெல்லாம் தூர்வாரி நீர் ஆதாரங்களை சேகரிக்க வழிவகை செய்யும் வேலையை நாம் தமிழர் கட்சி தொடங்கி ரொம்ப நாளாச்சு.

அதனைத் தொடர்ந்து,தி.மு.க,இன்னபிற கட்சிகளும் தன்னார்வலர்களும் களத்தில் இறங்கி வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.அந்த வரிசையில் லேட்டஸ்ட் என்ட்ரி ரஜினி ரசிகர் மன்றத்து ஆட்கள்.

சென்னை நங்கநல்லூர், சிட்லபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் குளம் மற்றும் ஏரிகளை காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் தென் சென்னை மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மற்ற நிர்வாகிகள் சுத்தப்படுத்திஇருக்கிறார்கள்.இந்த செய்தி தெரிந்ததும் தோழர் நல்லகண்ணு,ரஜினி ரசிகர்களைத் தேடிப்போய் பாராட்டியிருக்கிறார்.தமிழக அரசியலில் உள்ள அத்தனை கட்சிக்காரர்களும் மதிக்கக்கூடிய ஒரு தலைவர்,இப்படி நேரில் சென்று பாராட்டியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

water

இது குறித்து முதலில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் விவேக் ‘தாய்ப்பால் போல் தூய்மையான அரசியல் செய்யும் அரசியல் தலைவரான நல்லகண்ணு அய்யா அவர்களே,ரஜினி ரசிகர்களை வாழ்த்தி இருப்பது பெருமைதான்’ என்று குறிப்பிடிருக்கிறார்.

இது தொடர்பாகப் பேசிய ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர்,’ஐயா எங்களைப் பாராட்டியிருப்பது புது தெம்பைக் கொடுத்திருக்கிறது.இது நாடு முழுக்க இருக்கும் ரசிகர்களை இன்னும் உற்சாகமாக மக்களுக்கு சேவை செய்வதற்கான உற்சாகத்தைக் கொடுக்கும்’என்று நெகிழ்கிறார்.