நெல்லையில் வெங்காய மாலையை கடத்திய காங்., தலைவர்..!

 

நெல்லையில் வெங்காய மாலையை கடத்திய காங்., தலைவர்..!

இந்த மாலையை மகாராஷ்டிராவிற்கு கொண்டு சென்று விநியோகிப்பேன் எனக் கூறி வெங்காய மாலையை பத்திரப்படுத்திக் கொண்டாராம்.

தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கே.வி.தாமஸ் நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரை அந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர் வித்தியாசமாக வரவேற்க நினைத்தார். இதற்காக இந்தியாவையே கலக்கிக் கொண்டிருக்கும் வெங்காயத்தை மாலையாக மாற்றி வரவேற்பு கொடுக்க முடிவு செய்தார்.

இதற்காக 3 கிலோ பல்லாரி வெங்காயத்தால் ஆன மாலை செய்து மேலிட பார்வையாளருக்கு போட்டாராம். அவரும் வெங்காய மாலையை பார்த்ததும் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று வாங்கி போட்டுக் கொண்டாராம். பின்னர் அதில் இருந்து சில வெங்காயங்களை மட்டும் நினைவு பரிசாக தன்னுடன் மேடையில் அமர்ந்து இருந்தவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தாராம்.onion

அதன் பிறகு அவர் செய்ததுதான் அதிர்ச்சியின் உச்சம். அதாவது வெங்காயம் கிலோ ரூ.100, 150 என விற்கும் நிலையில் அதை அப்படியே போட்டு செல்ல மனமில்லாமல், இந்த மாலையை மகாராஷ்டிராவிற்கு கொண்டு சென்று விநியோகிப்பேன் எனக் கூறி வெங்காய மாலையை பத்திரப்படுத்திக் கொண்டாராம். அதை பார்த்த தொண்டர்கள் இது மகாராஷ்டிராவிற்கு செல்லாது. அவரது வீட்டு கிச்சனுக்கு தான் போகும் என்று சிரித்தபடியே பேசிக் கொண்டனர்.