நெல்லையில் இளம்பெண் கத்தியால் குத்தி படுகொலை: நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!
தனியார் ஜவுளிக் கடையில் பணியாற்றி வந்த மெர்சி என்ற இளம்பெண்ணை, ரவி என்ற வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை: தனியார் ஜவுளிக் கடையில் பணியாற்றி வந்த மெர்சி என்ற இளம்பெண்ணை, ரவி என்ற வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இயங்கி வந்த தனியார் ஜவுளிக்கடையில், மெர்சி என்ற இளம்பெண் பணியாற்றி வந்தார். அவருக்கு அதே ஊரைச் சேர்ந்த ரவி என்ற வாலிபர் காதல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், இன்று மாலை 6 மணியளவில் பணி முடித்து திரும்பிய மெர்சியை வழிமறித்த ரவி, ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்த முக்கிய சாலையில் வைத்து கத்தியால் குத்தியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
நெல்லையில் இளம்பெண் கத்தியால் குத்தி படுகொலை: நெஞ்சை பதர வைக்கும் சிசிடிவி வீடியோ!
முழு விபரம்: https://t.co/JxaWczPM2D#Thirunelveli #BrutalMurder #Murder #Police #Investigation #TamilNadu #TopTamilNews pic.twitter.com/lARX9NxIsy
— toptamilnews (@toptamilnews) November 27, 2018
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள நெல்லை போலீசார், படுகொலை செய்த ரவி என்ற வாலிபரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.