நெருங்கும் இடைத்தேர்தல்: பேருந்தில் வாக்கு சேகரித்த மு.க. ஸ்டாலின்..!

 

நெருங்கும் இடைத்தேர்தல்: பேருந்தில் வாக்கு சேகரித்த மு.க. ஸ்டாலின்..!

இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் புகழேந்தியை ஆதரித்து விழுப்புரத்தை ஒட்டிய ஸ்டாலின் நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அப்பகுதியில் தீவிரமா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் புகழேந்தியை ஆதரித்து விழுப்புரத்தை ஒட்டிய ஸ்டாலின் நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

MK Stalin

இரு தொகுதிகளிலும் திண்ணையில் அமர்ந்தும், நடைப் பயணமாகச் சென்றும் அனைத்து வீடுகளிலும் வாக்கு சேகரித்தார். அப்போது மக்களின் குறைகளைக் கேட்ட மு.க. ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப் படும் என்று மக்களுக்கு உறுதியளித்துள்ளார். மேலும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள, உள்ளாட்சித் தேர்தலுக்காக எந்த ஒரு முன்னேற்பாடும் செய்யப் படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.  

MK Stalin

அதனைத் தொடர்ந்து, நடைப் பயணமாக வாக்கு சேகரித்துக் கொண்டே வந்த அவர், அவ்வழியே ஏழு செம்பொன் பகுதியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசுப் பேருந்தில் ஏறி, பேருந்திலிருந்தவர்களிடம் குறைகளைக் கேட்டு வாக்கு சேகரித்துள்ளார். 

MK Stalin