நெருக்கடி தரும் அளவுக்கு எந்த கட்சியும் இல்லை! – ஜி.கே.வாசனுக்கு சீட் கொடுத்தது பற்றி கடம்பூர் ராஜு

 

நெருக்கடி தரும் அளவுக்கு எந்த கட்சியும் இல்லை! – ஜி.கே.வாசனுக்கு சீட் கொடுத்தது பற்றி கடம்பூர் ராஜு

கோவில்பட்டி நாலாட்டின்புதூர்காவல் நிலையத்துக்கு புதிய கட்டிடம் திறந்து வைக்கும் விழா இன்று நடந்தது. தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் சென்னையிலிருந்து கட்டிடத்தைத் திறந்துவைத்தார். நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் நடந்த விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு பங்கேற்றுக் குத்துவிளக்கேற்றினார். பின்னர் நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். 

ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை சீட் வழங்க அழுத்தம் எதுவும் காரணம் இல்லை என்றும் நெருக்கடி தரும் அளவுக்கு கட்சியே இல்லை என்றும் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி நாலாட்டின்புதூர்காவல் நிலையத்துக்கு புதிய கட்டிடம் திறந்து வைக்கும் விழா இன்று நடந்தது. தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் சென்னையிலிருந்து கட்டிடத்தைத் திறந்துவைத்தார். நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் நடந்த விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு பங்கேற்றுக் குத்துவிளக்கேற்றினார். பின்னர் நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். 

gk vasan

அதற்கு அவர், “ஜி.கே.வாசனுக்கு சீட் வழங்கப்பட்டதில் எந்த நெருக்கடியும் இல்லை. முதல்வரும், துணை முதல்வரும் கூடி முடிவெடுத்துள்ளனர். கடந்த முறை பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த முறை ஜி.கே.வாசனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை வேறு ஒரு கூட்டணிக் கட்சிக்கு வழங்கப்படும். அ.தி.மு.க-வுக்கு அழுத்தம் தரக்கூடிய கட்சி எதுவும் இல்லை… அப்படியே நெருக்கடி கொடுத்தாலும் அ.தி.மு.க அதற்கு ஆளாகாது” என்றார்.
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்படுமா என்று கேட்டபோது, “கேரளாவில் பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்பட்டதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. கொரோனா பாதிப்பு உள்ளவர் என்று ஒருவர் கூட தமிழகத்தில் இல்லை. அதனால், திரையரங்குகளை மூட வேண்டிய தேவை இல்லை” என்றார்.