நெடுஞ்சாலையில் பெய்த பண மழை…. உயிரை பணயம் வைத்து அள்ளிய வாகன ஓட்டிகள்!! 

 

நெடுஞ்சாலையில் பெய்த பண மழை…. உயிரை பணயம் வைத்து அள்ளிய வாகன ஓட்டிகள்!! 

சாலையில் பணம் கிடந்தால் பிணம் கூட வாயை பிளக்கும் என்பது நமது நாட்டுக்கு மட்டுமல்ல… அமெரிக்காவுக்கும் தான் பொருந்தும். அப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 

சாலையில் பணம் கிடந்தால் பிணம் கூட வாயை பிளக்கும் என்பது நமது நாட்டுக்கு மட்டுமல்ல… அமெரிக்காவுக்கும் தான் பொருந்தும். அப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அமெரிக்க நெடுஞ்சாலையில் கொட்டி கிடந்த பணத்தை, வாகன ஓட்டுநர்கள் போட்டி போட்டு உயிரை பணயம் வைத்து அள்ளிய சம்பவம் வீடியோவாக வௌயாகி உள்ளது. ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உள்ள ஐ 285 நெடுஞ்சாலையிலே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வங்கிக்கு பணம் எடுத்து சென்ற லாரியின் கதவு திறந்து பணம் பறந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு பறந்த பணத்தை போட்டிப்போட்டு சட்டை பையில் திணித்துக்கொண்டு புறப்பட்டனர். இதனை மைக் பாஸ் என்பவர் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.  

இந்த சம்பவம் குறித்து ஜார்ஜியா காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். சுமார் ஒரு லட்சம் டாலருக்கும் மேற்பட்ட பணம் வீதியில் பறந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.  பணத்தை எடுத்தவர்கள் மனசாட்சி படி ஒப்படைக்குமாறு காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.