நெஞ்சுவலியால் இறந்த தந்தை! மருத்துவம் பார்த்த மருத்துவரை சரமாரியாக தாக்கிய மகன்!!

 

நெஞ்சுவலியால் இறந்த தந்தை! மருத்துவம் பார்த்த மருத்துவரை சரமாரியாக தாக்கிய மகன்!!

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இலவங்கார்குடி கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று அதிகாலை அனுமதித்துள்ளனர். அப்போது சிகிச்சை பலனின்றி காமராஜ் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் காமராஜின் மகன் தாமரைச்செல்வன் அங்கு பணியில் இருந்த மருத்துவர் பிரபா மற்றும் மருத்துவ பணியாளர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனை கண்ணாடிகளையும் உடைத்துள்ளார். இதுகுறித்து மருத்துவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் தாமரைச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்