நீ என் உலக அழகியே…உன்னைப்போல் ஒருத்தி இல்லையே! உலக மகளிர் தினத்தில் உருகிய நயன்தாராவின் காதலர்!

 

நீ என் உலக அழகியே…உன்னைப்போல் ஒருத்தி இல்லையே! உலக மகளிர் தினத்தில் உருகிய நயன்தாராவின் காதலர்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது காதலியும் நடிகையான நயன்தாராவுக்கு மகளிர் தின வாழ்த்துக் கூறி பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது காதலியும் நடிகையான நயன்தாராவுக்கு மகளிர் தின வாழ்த்துக் கூறி பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் No:1 நடிகையாக வலம்வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து தற்போது தளபதி 63 மற்றும் தல 59 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். 

nayanthara

இவருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் மூலம் காதல் மலர்ந்தாக கூறப்படுகிறது. அதையடுத்து நயன்தாராவின் பிறந்தநாள், காதலர் தினம் என முக்கியமான தினங்களில் விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவிப்பதோடு மட்டுமின்றி இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்து வருகின்றனர்.

nayanthara

அந்த வகையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று நயன்தாராவுக்கு ரோஜா மலர் கொடுத்து தனக்கே உரிய பாணியில் வாழ்த்து தெரிவித்துப் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் இதில் ‘நீ என் உலக அழகியே… உன்னை போல் ஒருத்தி இல்லையே…மகளிர் தின வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தங்கள் மீது யார் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்களே வலுவான பெண்களாக உருவாகிறார்கள். 

இந்த சூழலை நீங்கள் தான் அழகாக மாற்றுகிறீர்கள். ஆதலால் உங்களுக்கு நன்றி. இந்த மகளிர் தினத்தில் பெண்களுக்கு மரியாதை அளிப்பதன் மூலம், அவர்களை நேசிப்பதன் மூலம் இதயத்தை முழுமையாக்கலாம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

nayanthara

இந்த போஸ்டை பார்த்த அவரது ரசிகர்கள் விரைவில் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளும் படி கமெண்ட் செய்து வருகின்றனர்.