நீரில் தத்தளித்தவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஆற்றுக்குள்

 

நீரில் தத்தளித்தவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஆற்றுக்குள்

vaigai river

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வந்ததால், தமிழகம் முழுவதுமே ஆறுகளிலும், நீர் நிலைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சகோதரர்களான ஜெகன், குமரேசன் ஆகிய இருவரும், தங்கள் குடும்பத்தினருடன் நிலக்கோட்டை அருகே இருக்கும் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சாமி கும்பிடச் சென்றனர். பின்னர் அனைவரும் அங்குள்ள வைகை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.  

ஜெகன், குமரேசன் குடும்பத்தினர் அனைவரும் கரையோரத்தில் நின்றுக் கொண்டு, ஆற்றில் குளிப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்த போது, ஏற்கெனவே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 3 பெண்கள் சுழலில் சிக்கிக் கொண்டதால், தங்களைக் காப்பாற்றுமாறு அலறினர். ஆற்றின் நடுவில் 3 பெண்கள் காப்பாற்றும் படி அலறியதைக் கேட்டு சகோதரர்கள் இருவரும் உடனடியாக ஆற்றுக்குள் இறங்கி அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். நீரில் தத்தளித்தவர்களைக் காப்பாற்றும் முயற்சி, சகோதரர்கள் இருவரும் நீர்சுழலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர். காப்பாற்றச் சென்று இருவருமே உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் இருந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.