நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

 

நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோவை: சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு பெரும்பாலானோரிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் அர்ஜூன் சம்பத் போன்றவர்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் தீர்ப்பு குறித்து மத்திய நிதியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், சபரிமலை குறித்த தீர்ப்பு பக்தர்ளுக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும் அளிக்கிறது. வழிபாட்டு தலங்களில் பாரம்பரிய நடைமுறைகளை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.