நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெறுவதற்கான கிருத்திகை வழிபாடு

 

நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெறுவதற்கான கிருத்திகை வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை அசைவ உணவுக்கு தடா சொல்லி, அமாவாசை விரதம் இருக்கும் ஆன்மிக அன்பர்களே… இன்று கிருத்திகை விரதத்தையும் மிஸ் பண்ணாதீங்க…

ஞாயிற்றுக்கிழமை அசைவ உணவுக்கு தடா சொல்லி, அமாவாசை விரதம் இருக்கும் ஆன்மிக அன்பர்களே… இன்று கிருத்திகை விரதத்தையும் மிஸ் பண்ணாதீங்க…

murugan

மாதந்தோறும் வருகின்ற கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து கந்தனை வழிப்பட்டால் சங்கடங்கள் யாவும் பனித்துளியாய் விலகும். முருகனுக்கு உகந்த நட்சத்திரம் கிருத்திகை. முருகனின் அருளை முழுவதுமாய் பெற உகந்த விரதம் கிருத்திகை விரதம்.

நிறைவான அறிவு, நிலையான செல்வம், கலையாத கல்வி, நீண்ட ஆயுள், நல்ல வாழ்க்கைத் துணை, குணமுள்ள குழந்தைப் பேறு என்று எல்லா வயதினருக்கும் கிடைக்கும் பலன்களாக கிருத்திகை விரதம் இருக்கிறது.

murugan

குடும்பத் தலைவி, இரவில் தூக்கத்தை தவிர்த்து, கண் விழித்திருந்து கந்த மந்திரங்களைச் சொல்லி நாளை காலை ரோகிணி நட்சத்திரத்தில் நீராடி, கந்தனை மனமுருகி வேண்டி, அவனது அடியார்களுக்கு அன்னதானம் செய்து வந்தால் நிச்சயம் சங்கடங்கள் எல்லாம் விலகி வேண்டிய வரம் கிடைத்து முருகனின் பரிபூரண அருளைப் பெறலாம்.