நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் மேலும் 3 மாணவர்கள் கைது.! ஒரே பயிற்சி மையத்தில் படித்தது அம்பலம்!!
நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் உதித் சூர்யா மட்டுமின்றி மேலும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் உதித் சூர்யா மட்டுமின்றி மேலும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் கைதாகிய உதித் சூர்யாவும் அவரது தந்தையும் சிபிசிஐடி காவலில் வைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் மீது போலீசார் கடும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரும், இன்னும் நிறையப் பேர் ஆள் மாறாட்டம் செய்ததாகவும், 2 தரகர்கள் இதற்கு உதவியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இன்னும் அவர்களிடம் விசாரணை தொடர்ந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் பாலாஜி மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர் பிரவீண், அவரது தந்தை சரவணன், எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவர் ராகுல், அவரது தந்தை டேவிஸ், சத்ய சாய் மருத்துவ கல்லூரி மாணவி அபிராமி, அவரது தந்தை மாதவன் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது, உத்தரபிரதேசத்திலும், டெல்லியிலும் இவர்களுக்காக வேறு நபர்கள் நீட் தேர்வு எழுதியதையும், இதற்காக லட்சக்கணக்கில் பணம் கைமாறியதையும் 3 மாணவர்களும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அதில் ஒரு மாணவன் வெளிநாடு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். உதித் சூர்யா உள்ளிட்ட 5 பேரும் ஒரே பயிற்சி மையத்தில் படித்து முறைகேடு செய்ததும் அம்பலமாகியுள்ளது.